கவிதை - என்னவளின் காதல் - சந்தியா
கொள்ளைக் கொண்ட உன்
அழகு உதடுகளை வண்டுகள்
நாடுகின்றன……
தென்றல் உன்னை தீண்டுவதனால்
உண்டான உனது சின்ன சின்ன
சினுங்கள்கள், வெட்கங்கள்
என்னை மயக்குகின்றன……
உன்னை தீண்டிய காற்றை
நான் சுவாசிக்கும் போழுது
என் மேனி எங்கும் சிலிர்க்கின்றன……
நீ இல்லாத என் வாழ்க்கை
உயிர் இல்லாத உடலடி
என் கண்ணே……
என்னவனே அன்று இதை
உறைத்தது நீ தானே ?
இன்று உன் கை தீண்டி
என் உயிர் பறித்துவிட்டாயடா
உனது காதலிக்காக……
இப்போதும் என் இதழில்
புன்னகை மட்டுமே உதிர்கின்றேன் நான்……
உன் கை தீண்டி அல்லவா
என் உயிர் விட்டேன் என்று……
இது போதும் நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு
என்றும் உன் நினைவுடனே
என் உயிரையே தந்துவிடுகிறேன்
உனக்காக………
இது ஒரு மலரின் காதல் இம்மலரை போலத்தான் ஒரு பெண்ணின் காதலும் நிராகரிக்கப்படுகின்றன.இதில் பெண் என்பவள் பூ போன்றவள் என்ற உவமையை கூறியுள்ளேன்