கவிதை - கருவின் கதறல் - சந்தியா
பெண் கருவாக உருவானது என்
குற்றமா ?
என்ன தவறு செய்துவிட்டேன் நான்
பெண்ணாக உருவானதை தவிற…?
எதற்காக என்னை அழிக்க
விரும்புகிறார்கள்…?
என் அன்னையின் அழுகுறல் வெளியே
கேட்கின்றதே.……
அவளின் பூமுகத்தை கூட நான்
பார்க்கவில்லையே ……
கருவாகத்தானே உருவாகி உள்ளேன்
கல்லரையில் கூட சேர்க்கமாட்டார்கள்
போல என்னை……
வாடுகின்றேன் என் அன்னை வயிற்றில்
பெண் கருவாக……