கவிதை - விவசாயியின் கனவு - சந்தியா
மண் என்னும் சிற்பியில் முத்தேடுப்பான்
அவன்……
வரண்ட நிலத்தில்
ஈரமனம் கெண்டுள்ளவன்
அவன்……
பருவ மகளின் விளைச்சலை காண
உச்சி வெயிலில் நிற்பவன்
அவன்……
தன் பசியை மறந்து பிறர்
பசியை ஆற்ற நினைப்பான்
அவன்……
மாரிக்காக பகலும் வெயிலும்
காத்து நிற்பவனின்
கனவுகள் எல்லாம்
கானல் நீராய் மாறியது
இங்கே……!