கவிதை - நீ வருவாயென - சந்தியா
என் உயிரோடு
கலந்த நீ
என் உணர்வோடு
விளையாடிவிட்டாயடா……
உனக்காக காத்திருக்கின்ற
ஒவ்வொரு நொடியும்
பல யுகங்களாயின
என் வாழ்வில்……
நீ இல்லாத என் வாழ்க்கை
என்ற வார்த்தைகள்
என் வாழ்வின் துயரமறிந்து
கண்ணீர் சிந்திக்கொண்டிருகின்றன……
எத்தனை பிறவி எடுத்தாலும்
உன்னோடு தான்
என் வாழக்கை
என்று நீ சொன்ன
அந்த ஒற்றை சொல்லுக்காக
உயிரோடு வாழ்கிறேன்
என்றாவது ஒரு நாள்
நீ வருவாயன……!