கவிதை - மன்னவனின் மா(ம)மாலை - தமிழ் தென்றல்
மாதங்கள் மறைந்தோட
மன்னவனைக் காணவில்லை!
மனதிற்கினிமை சேர்த்து
மணமாலை சூட்டிடுவானோ?
மல்லிகையே எனக்கில்லை நீயென
மண்ணில் எறிந்திடுவானோ?
மனம் மயங்கிய மங்கையிவளை
மடிதாங்கிடுவானோ?
மடந்தையிவளை மறுத்து
மதியிழக்க செய்திடுவானோ?
மனக்காயங்களை மாற்றி
மறுவாழ்வளித்திடுவானோ? அல்லது
மரணத்தை பரிசளித்திடுவானோ?
{kunena_discuss:779}