(Reading time: 1 - 2 minutes)

கவிதை - மன்னவனின் மா(ம)மாலை - தமிழ் தென்றல்

waiting

மாதங்கள் மறைந்தோட

மன்னவனைக் காணவில்லை!

 

மனதிற்கினிமை சேர்த்து

மணமாலை சூட்டிடுவானோ?

 

மல்லிகையே எனக்கில்லை நீயென 

மண்ணில் எறிந்திடுவானோ?

 

மனம் மயங்கிய மங்கையிவளை

மடிதாங்கிடுவானோ?

 

மடந்தையிவளை மறுத்து

மதியிழக்க செய்திடுவானோ?

 

மனக்காயங்களை மாற்றி

மறுவாழ்வளித்திடுவானோ? அல்லது

மரணத்தை பரிசளித்திடுவானோ?

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.