கவிதை - ஏனடா?!! - தமிழ் தென்றல்
கண்களில் காதலைக் கற்பித்துக்
காணாமல் போனதேனோ?
நேசத்தை நெஞ்சத்தினில் தைத்து
நெருங்காமல் போனதேனோ?
இதயத்தில் உன் நினைவைத் திணித்து
பாராமுகம் கொண்டதேனோ?
மோகத்தீயை என்னுள் மூட்டிவிட்டு
மௌனத்திரை கொண்டதேனோ?
தூங்கா இரவுகளை பரிசளித்து
தொலைந்து போனதேனோ?
முத்த முத்திரையை பதித்து
மொத்தமாய் விலகியதேனோ?
என் ஐம்புலங்களையும் தூண்டிவிட்டு
உன் காதல் மறைந்ததேனோ?!!
{kunena_discuss:779}