(Reading time: 1 minute)

18. காதல் ஏன் இப்படி? - ஷிவானி

Kathal yen ippadi

காதல் கடிதங்கள் பல எழுதினேன்

       கண்ணே உனக்கு!

           ஆனால்

மௌனமாய் சொல்ல மறந்தேனே

       என் மனதை உனக்கு!

 

எழுத்துக்களால் எடுத்துரைக்க நினைத்தேன்

         என்னை உனக்கு!

             ஆனால்

பார்வையில் உன்னிடம் பகிராததால்

         பாவியானேன் பெண்ணே எனக்கு!

 

என்னில் பூத்த காதலை பூங்கொத்தில்

         சேர்க்க நினைத்தேன் உன்வசம்!

              ஆனால்

உதிர்ந்த மலரோடுசேர்ந்து காலம் கடந்ததால்

          சரிந்துநின்றது என்வசம்!

 

சொல்லிய வார்த்தைகள் சொற்ப்பம்தான் பெண்ணே!!!

சொல்லாமல் போனாலும், இல்லாமல் போகவில்லை,

என் காதல் உனக்கு கண்ணே!!!    

Poem # 17

Poem # 19

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.