(Reading time: 1 minute)

த்ரௌபதிகள் - சிவரஞ்சனி 

woman

கண்ணா!
உன் வஸ்திரங்கள் மற்றும் 
சக்தியினை ஒரு த்ரௌபதியின்
மானம் காப்பதிலேயே
செலவளித்துவிட்டாயா?

இன்று எத்தனை துரியோதனன்கள் மற்றும் துட்சாதனன்களால்
ஏதுமறியா சின்னஞ்சிறு பிஞ்சு 
த்ரௌபதிகள் இரக்கமின்றி
சூரையாடப்படுகின்றனர்!

அவர்களின் கதறல் கேட்காமல்,
மானம் காக்காமல்
எங்கே சென்றாய்?

உன் ஆன்மா துடிக்கவில்லையா?
போதும் கண்ணா!
கலியின் களியாட்டத்தை
நிறுத்து!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.