கவிதை - அவளும் தமிழும் தமிழும் அவனும் - ஷக்தீ
தாயை விட தாய்மொழி நேசிப்பவள் அவள்
தமிழா நானா என தர்க்கம் புரிபவன் அவன்
அவள் மொழிந்தால் அது இல்பொருள் உவமை அணியாம்
அதுவே அவன் மொழியால் உயர்வுநவிற்சி அணியாம்
அசை சீர் தளை என கலந்துகட்டி
யாப்பு யுத்த களேபரம் செய்வாள் அவள்
அசைவின்றி அவள் கர்வ கண்களை
மொழிபெயர்த்து கண் சிமிட்டுவான் அவன்
கவி சிலேடை கூட இரு பொருள்தான் தரும்
கவியவன் சிலேடை பலருக்கு பொருள் தரும்
கன்னியான நாட்களில் கல்ஆடாமல்
கல்கியுடன் கரைந்தவள் அவள்
கண்டறியாமல் கதை தெரியாமல்
குளம்பியென கற்பிப்பான் அவன்
அவன் வாழ்வில் அவள் இறந்தகால வினைமுற்று
அவள் வாழ்வில் அவன் வினைத்தொகை
தமிழும் திங்களும் ரசிக்கா கவிதை இல்லை
தமிழும் திங்களும் ரசிக்கா கவிஞனும் இல்லை
தமிழும் கவியும் பழகியது பல காலங்கள்
தமிழ்க்கயவன் பழகியதோ சில காலங்கள்தான்
தமிழ்க்கலை ஓர் இரவில் கைவரப்பெறுவதில்லை
கம்பனின் சீதை இல்லை நீ என்றான் அவன்
கண்ணன்பாட்டு ராதையும் இல்லை என்றாள் அவள்
தமிழ்மொழியால் தொடங்கிய உரை
தன் மொழியின்றி மௌனத்தில் மனதில்
{kunena_discuss:779}