(Reading time: 1 - 2 minutes)

என்னுள் அவள் எண்ணம் - வின்னி

Ennul

என் கண்களைக் கட்டி நடுக் காட்டில் விட்டதுபோல் ,  

நான் தட்டுத் தடுமாறி, வழி தவறிச் சென்றேன்!

என் கை,கால்களைக் கட்டி ஆற்றில் விட்டதுபோல் ,

நான் நீந்த முடியாமல் கவலையில் மூழ்கி த் தத்தளித்தேன்!

என் உடலைக் கட்டி நெருப்பில் விட்டதுபோல்,

நான் தீயால் வெந்து, புண்ணாகித் தடுமாறினேன்!

என் மனதை அவள் உடலில் விட்டாய்,ஏன் என்னை அவள் உள்ளத்தில்  விடவில்லை?

நான் காதலென்னும் மாயையால் என்னை மறந்து, மயங்கி நின்றேன், அவள் அழகில்.

என் உயிரால் முடியவில்லை, அவள் உள்ளத்தைக் கவர!

நான் வாழ்வதில் என்ன பயன்?

என் அறிவில், அவள் உள்ளத்தை விடக் கொடியவை ஒன்றுமில்லை!  

என் உயிரை எடுத்துவிடு, இறைவா!,   

உள்ளிருக்கும் அவள் எண்ணத்துடன், போய் விடட்டும் என்னுள்ளம்.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.