அப்பாவுக்கு ஒரு கடிதம் - வின்னி
அன்புள்ள அப்பா,
தோளில் சுமந்து சென்று, பள்ளியில் வீட்டாய் என் சிறு வயதில்.
நான் அழுது கதறினேன், நீ அடிக்கவில்லை,
அன்பு வார்த்தைகள் கூறி அரவணைத்தாய்.
பள்ளி செல்ல மனமின்றி அடம்பிடித்தேன், நீ திட்டவில்லை,
புத்திமதி கூறி என் மனதை மாற்றப் பார்த்தாய்,
ஆசையாக அணைத்தாய் என்னை.
இனிப்புப் பண்டங்களைத் தந்து அன்பாகப் பேசி,
என்னைப் பள்ளியில் விட்டாய் படிப்பதற்கு.
சிறியவன் நான் புரியவில்லை எனக்கு.
படிப்பில் கவனமின்றி திரிந்து விட்டேன் என்வழியில்.
வளர்ந்து விட்டேன் வாலிபனாக, வளரவில்லை என் அறிவு
நீயும் பொருத்திருந்தாய் திருந்தி விடுவான்,
பொறுப்பு வரும், வளர வளர என்றெண்ணி.
புகை பிடிக்கப் பழகினேன்,
மது பானம் அருந்தினேன்,
கேடுகெட்ட நண்பர்களின் சேர்க்கையால்
உன் அறிவுரையைக் கேட்க மறுத்தேன்
அம்மா சிறிது சிறிதாக சேர்த்து வைத்த காசெல்லாம் திருடித் சூதாடி தோற்றுவிட்டேன், தோழர்கள் என்ற அந்தக் கயவர்களிடம்.
நடத்தை கேட்ட பெண்களின் சேர்க்கையால்,
ஓடிவிட்டேன் ஊரைவிட்டு அவர்களுடன்,
மோட்டார் பைக்கைத் திருடி, போய் வந்தேன் சிறைக்கு நான்.
மானம் போகிறது கலைத்துவிடு வீட்டிலிருந்து”, என்றார்கள்
உற்றார், உறவினர் உன் நண்பர்கள்.
என் வளர்ப்புச் சரியில்லை என்றார்கள் அவர்கள்
கேட்கவில்லை நீ அவர்களை,
என் அறிவு மாறுமென்று, இன்னும் என்னைப் பொறுத்தாய்,
உன் அருமைப் பிள்ளையல்லவா நானென்று
உன் மனதை வதைத்தெடுத்தேன், பாசம் அறியாத கொடியவன் நான்
உன் உடலை நோகவைத்தேன், நன்றி இல்லாத அரக்கன் நான்
மனம் திருந்தி வீடு வந்தேன், காலம் கடந்து,
உன்னிடம் மன்னிப்புக் கேட்க வந்தேன் காலம் கடந்து
என்னை எண்ணி உடல் நலிவால் உயிரிழந்த
உன் உடலை எரிக்கவா வந்தேன், நான் இந்தப் பாதகன்
கடலில் கரைத்துவிட்டேன் எரிந்த உன்னுடலின் சாம்பலை.
என் பயனற்ற உடலும் உயிரும் வேண்டாம் எனக்கு
என் கறையைக் கரைக்க முடியவில்லை என்னால்.
என் சாம்பலாவது கரைந்து விடட்டும் அக் கடலில்
வந்துவிடுவேன் உன்னுடன் நான்,
ஆனால்! உன் உயிரை, அம்மாவின் உடலில், விட்டுச் சென்றாய்,
என் அம்மாவைத் தனியே விட என்னால் முடியவில்லை.
என் கடமை அவளைக் காப்பதுதான் உன்மேல் சத்தியம்.
என் மறுபிறவிக்கு உயிர் கொடுத்து விடு.
மன்றாடிக் கேட்கிறேன் மன்னித்து விடு என்னை!
இப்படிக்கு,
உன் அறிவுரை கேட்காத முட்டாள் நான்.
{kunena_discuss:779}