கவிதை - புத்தாண்டு கனவு - சுஜி பிரபு
காலையில் விழித்ததும்
நிறமிழந்து, நினைவிலிருந்தும்
மறைந்து விடும் எத்தனையோ
கனவுகளுக்கு மத்தியில்
விவசாயிகளின் தற்கொலையின்றி...
கல்வியில் வியாபாரமின்றி...
திறமையின் நிராகரிப்பின்றி...
அரசியலில் ஊழலிலின்றி...
உன்னத நட்பில் துரோகமின்றி...
மங்கையர்கள் மீது பாயும் வன்கொடுமையின்றி...
பேரழிவை கொண்டு வரும்
இயற்கை சீற்றங்களின்றி...
எவ்வித கண்ணீருமின்றி...
எல்லையில்லா நம்பிக்கையுடனும்
தன்னலமில்லா மனிதத்துடனும்
மாசற்ற அன்புடனும்
குறையாத வளத்துடனும்
மறையாத புன்னகையுடனும்
நட்புணர்வுடன்
நம் கரங்கள் கோர்த்து
இன்று
நாம் காணும் கனவுகள்
வரும் புத்தாண்டில் நனவாகட்டும்.....
என்றென்றும் நம் வாழ்வில்
மகிழ்ச்சி பொங்கட்டும்....
{kunena_discuss:779}