கவிதை - கசப்பான உண்மை - ஆர்த்தி N
அழகு கொஞ்சும் வயல்கள்
அவ்வயல்கள் யாவும் நெற்கதிர்கள்
சுற்றிலும் பசுமையென கண்கள் களிக்க
தன் பிள்ளையை ரசிக்கும் தந்தையைப் போல
ரசித்த விவசாயின் கண்களில் இன்று நாம்
காண்பது தான் யாதோ ?
உணவிற்கு வழி செய்தவன்
பசியினால் மடிகிறான்.
உடல் கேடிற்கு வழி செய்தவன்
உச்சத்தில் வாழ்கிறான்.
இதுவே உலக நியதியென்றால்
வருந்துகிறேன் நமக்கு
உணவளிக்கும் தெய்வத்திற்காக !!!!!
{kunena_discuss:779}