கவிதை - என் அன்புத் தோழனே - கண்ணம்மா
என் அன்புத் தோழனே...
நான்
உன்னை நினைக்கத்
தொடங்கும் தருணம்...!!!
நான்
என்னை மறக்கத்
தொடங்கிய நிமிடம்...!!!
என்னை அறியாமல்
உன்னை நினைத்துத்
துடித்த பொழுதில் உணர்ந்தேன்..
அன்பின் உருவிலே
நீ எனக்காக வந்துள்ளாய் என்று..!!!
என்னைக் காக்க வந்த தேவதை நீ...!!!
கடவுளாக வந்த கண்ணிமை நீ...!!!
அன்பு காட்டும் அன்னை நீ...!!!
கன்டிப்பில் தந்தை நீ...!!!
புல்வெளியாக வந்த பசுமை நீ...!!!
காற்றாய் வந்த சுவாசம் நீ...!!!
மலரினில் எழும் வாசம் நீ...!!!
நெஞ்சத்தில் நிறைந்த நிலவு நீ...!!!
நிலவின் நேசமும்
மலரின் வாசமும்
கொண்டவன் நீ...!!!
பால்வண்ண நிலவை
பாற்கடலில் கரைத்து
ஆண் வடிவம் உரித்து
பிறந்தவன் நீ...!!!
துடித்துத் துவளும்
இதயத்தை இதமாக்கிய
இனியவன் நீ...!!!
மணத்தால் மனதை மகிழ்விக்கும்
மாமலர் நீ...!!!
சுவாசிக்கும் மலரே...
நேசித்தால் என்ன????
{kunena_discuss:779}