கவிதை - அன்பெனும் வலி - தீபாஸ்
நீ செய்த தவறுகளையும்
சரி எனச் சொன்னேன்.
நீ காண்பித்த மருவைக்கூட
அழகெனச் சொன்னேன்.
நீ அடித்த அடியைக்கூட
ஆசையாகப் பெற்றேன்.
நீ ஊட்டிய பாகற்காயைக்கூட
இனிப்பாய் சுவைத்தேன்.
நீ கொடுத்த காகிதம்கூட
பொக்கிஷமாய் வைத்தேன்.
நீ கேட்ட பிரிவைக்கூட
உனக்காக கொடுத்தேன் .
நீ விதைத்த நினைவுகளுக்குக்கூட
நித்தம் (கண்)நீரூற்றி வளர்கிறேன் .
{kunena_discuss:779}