கவிதை - மனிதனாக இரு - தீபாஸ்
பெற்றோருக்கு பிள்ளைகள் வரம்.
பிள்ளைக்கு இளமை வரம்
இளமைக்கு துணை வரம்
துணைக்கு கொடுக்கும் பிள்ளை வரம்
இதுதானோ வாழ்கையின் சுழல்
சுழலில் சிக்காதோர் சன்யாசி
சன்யாசத்தால் இறையடியோ?
இறையடிக்கு கிடைப்பதெது?
சன்யாசியும் போவான் மண்ணோடு
சம்சாரியும் போவான் மண்ணோடு
வாழ்வுமுறை எதுவென்றாலும்
வழிமுடியும் மண்ணோடுதானே.
இன்னொரு ஜென்மம் என்பது நிஜமோ?
அடுத்த ஜென்மம் என்பது சாத்தியமோ?
இருக்கும் ஜென்மத்தில் நிம்மதியடைய
பணப்பேயாக மாறாமல் மனிதனாகஇரு.
{kunena_discuss:779}