கவிதை - இருந்துதான் பாருங்களேன் - ரேவதிசிவா
சண்டைகளை மறந்து சமாதானமாகி
இருப்பதைப் பகிர்ந்து
எச்சில் கையால் ஊட்டி
அந்த வாயால் முத்தம் கொடுத்து
கவலை இல்லாமல் திரிந்து விளையாடும்
இவர்களைப்போல்
இருந்துதான் பாருங்களேன்−நீங்களும்
உணர்வீர்கள்
வாழ்க்கையின் இரகசியத்தை....
{kunena_discuss:779}