கவிதை - வெட்கம் - ரேவதிசிவா
முகத்தைக் குனிந்தோ மூடியோ
வெட்கப்பட−பெண்களுக்கு மட்டும்தான்
தெரியுமென்று நினைத்திருந்தேன் இதுவரை...
ஆனால்
மற்றவர் உன்னை அழைக்கும்பொழுது
என் தோளில் முகத்தைப் பதித்து
தலையை ஆட்டி நீ மறுக்கும்பொழுதுதான்
தெரிந்தது
என் குழந்தைக்கும் வெட்கம் வருமென்று....
{kunena_discuss:779}