(Reading time: 1 minute)

கவிதை - உன் "பார்வை" பட்டு - அனு செல்வி

Eyes

அக்னிக்கு ஒரு சக்தி உண்டு ;

தன்னை நெருங்கும்.....

தான் நெருங்கும்.....

என அனைத்தையும்

தனக்கே சொந்தமாக்கிக் கொள்ளும்;

அது போல,

உன் காந்தக் கண்களுக்கும் உள்ளதோ??.

 

உன் பார்வை மட்டும் படவில்லையென்றால்....

நான் பாவப்பட்டவளாகவே இருந்திருப்பேனோ??....

 

கோசலை ராமனின் பாதம் பட்டு

அகலிகை மோட்சம் பெற்றாள்....

உன் "பார்வை" பட்டு

நான் எப்போதுமே சிலை தான்....

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.