கவிதை - உன் "பார்வை" பட்டு - அனு செல்வி
அக்னிக்கு ஒரு சக்தி உண்டு ;
தன்னை நெருங்கும்.....
தான் நெருங்கும்.....
என அனைத்தையும்
தனக்கே சொந்தமாக்கிக் கொள்ளும்;
அது போல,
உன் காந்தக் கண்களுக்கும் உள்ளதோ??.
உன் பார்வை மட்டும் படவில்லையென்றால்....
நான் பாவப்பட்டவளாகவே இருந்திருப்பேனோ??....
கோசலை ராமனின் பாதம் பட்டு
அகலிகை மோட்சம் பெற்றாள்....
உன் "பார்வை" பட்டு
நான் எப்போதுமே சிலை தான்....
{kunena_discuss:779}