கவிதை - உன் பார்வையாலே - அனு செல்வி
கம்பீரமான உன் கண்களும் கூட
காவியம் பேசுகின்றனவே!...
விழி எழுதுமோ கவிதைகள்?...
உன் விழிகள் சொல்லித்தான் தெரிகிறது!...
உனக்கென்ன பார்வையால் பேசிவிட்டு போய்விட்டாய்!!...
நானல்லவா ஊமையாகி போனேன்??...
உன்னிடம் பேச வருகையில்,
காணாமல் போகும் என் வார்த்தைகளைத்
தேடுவதே என் வேலையாகிப் போகிறது...
உன்னைக் காணும் முன்பு எழுதத்தெரியவில்ல!...
ஆனால், உன்னை கண்டபின்போ
எழுதிக்கொண்டே இருக்கிறேன்;
முடிக்கத் தெரியவில்லை ....
உன் பார்வையாலே, என்னை பாடாய்ப்படுத்தத்தான்
அந்த இறைவன்
உன்னை பூலோகம் அனுப்பினானோ???...
{kunena_discuss:779}