கவிதை - மழை - சமீரா
இயற்கையின் ஆற்பரிப்பில்
இலையோடு கதை பேசும்
இடைவெளியின்றி கொட்டும் மழை..!
இன்னிசையாய் இடை இடையே
இணைந்து வந்து போகும்
இடியும் மின்னலும்..!
சாரளம் வழியே
சாரலுடன் தூது விடும்
சங்கீதமாய் தேடி வரும்
சந்தோசத்தை அள்ளித்தரும்
சலசலக்கும் வண்ண மழை..!
{kunena_discuss:779}