(Reading time: 2 - 3 minutes)

கவிதை - என் அன்னையே..! - சமீரா

இன்னல்கள் பல கடந்து

ஈரைந்து மாதம் என்னை

சுமையென்று பாராமல்

சுகமாய் தாங்கியவள் நீ!

இரவுகளின் ஆக்கிரமிப்பில்

ஆழ்ந்த தூக்கத்தையும்

என் சிறு சினுங்கல்களில்

எனக்காய் துலைத்தவளும் நீ!

மழலை மொழி நான் பேச

உன் மொழியிழந்து

என்னோடு குழந்தையாகி

மகிழ்ந்தவளும் நீ!

எனக்கு ஊட்டிவிடும்

போராட்டமதில் உன் பசி

மறந்து போனவளும் நீ!

நான் தத்தி நடக்கையில்

தடுமாறி விழுகையில்

எனக்கு துணையாய்

என்றுமே நீ!

அடம்பிடித்து அழுதாலும்

ஆகாது என்றால்

மறுத்தே விடுபவளும் நீயே!

நான் தவறு விடுகையில்

திருத்திவிடும் ஆசானும் நீ!

தோல்வி கண்டு துவல்கையில்

தோள் கொடுக்கும்

என் தோழியும் நீ!

என் அழுகைகளில்

என்னை அரவணைக்கும்

ஆறுதலும் நீயே!

நானோ..! வளர்ந்துவிட்ட

மிதப்பில் வாயாடுகிறேன்..!

ஒற்றை புருவ அசைவில்

உணர்த்திவிடுகிறாய் நீ!

வளர்ந்தாலும்  நான் இன்னுமே

 உன் சிறு குழந்தையென்றே!

மெய் சிலிர்க்கிறேன் உன் அன்பில்..!

வார்த்தைக் கொண்டு

வார்க்கத் தெரியவில்லை

நீ சுமந்த வலிகள்தனை..!

நீ எனக்காய் தவறவிட்டாய்

எண்ணிலடங்கா இன்பங்களை..!

நான் எதைக் கொண்டு

தீர்ப்பேனோ! உன் பெற்ற கடனை..!

அன்னையே அந்திமம் என்பது

என்றுமே நெடுந்தொலைவில்

இருந்திட வேண்டும்..!

மீறி வருமானால் நானோ!

உன் அருகிலிருக்க

எண்ணவில்லை..!

உன் அன்னையாய் இருக்கவே

நான் பிராத்திக்கிறேன்..!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.