(Reading time: 1 - 2 minutes)

கவிதை - அருவி - சமீரா

waterfalls

இதயம் கொய்யும் இயற்கையின்

இருமாப்பின் வெளிப்பாடோ..!

உரசிடும் கற்களில் ஊற்றெடுக்கும்

உயிர்த்தீண்டல் இவளோ..!

மலை குன்றுகளை மொத்தமாய்

மயக்கிய மாயக்கன்னியோ..!

காற்றினை மிஞ்சியே

காணம் இசைக்கும் காரிகையோ..!

அலங்காரம் ஏதுமின்றியே ஈர்க்கும்

அழகிய அணங்கு தானோ..!

முகடுளை தத்திதாவி

முத்தமிட்டு வெட்கப்பட்டு ஓடும்

மஞ்சனம் பூசி மனதை சாய்க்கும்

மங்கை தான் இவளோ..!

சாரமரம் தூவிடும் மரங்களிடையே

சாகசம் பல நீ புரிந்திட

நாணம் கொண்ட உன்மடியில் சங்கமித்து

நாளிகை பல கடத்திடவே

நானோ நாடுகிறேன்..!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.