(Reading time: 1 - 2 minutes)

கவிதை - காதல்...... - சமீரா

loveHeart

ஆயிரம் அர்த்தப்படுத்தல்களுக்கு

அப்பாற்பாட்டதோ காதல்..

ஆண்டவன் படைபின்  அற்புதமோ காதல்..

ஆடவரை மையல் கொள்ளும்

ஆழிப் பேரலையோ காதல்..

அரைநொடி பார்வையிலே

அகிலமதை அடக்கிடுவதோ காதல்..

அருகாமையில் இருந்தால்

அவளுக்கான தாங்கலோ காதல்...

அவன் நீங்கினால் அனுதினமும்

அவளுள் எழும் உருகலோ காதல்..

இருவர் இணையும்

இருதய பரிமாற்றமோ காதல்..

இரும்பு மனதினையும் ஈர்த்து

இலக வைப்பதோ காதல்..

இளைமை கடந்தும் இருமனமும்

இணைந்தே இருப்பதோ காதல்..

சண்டையிட்டாலும் கர்வமின்றி

சரணடைவதோ காதல்..

சாத்திரங்கள் சத்தமின்றி ஒதுக்கிய

சங்கதியோ காதல்..

சாதுவையும் மிரள வைக்கும்

சாதுரியமோ காதல்..

தள்ளாடும் வயதிலும்

தாங்கிப்பிடிப்பதோ காதல்..

தன்னவள்  தாய்மையடைந்தால்

தாயுமானவராய் மாற்றுவதோ காதல்...

தனிமையும் இனிமையாய்

தந்திடும்  தவிப்போ காதல்..

எது காதல் என்ற ஆராய்ச்சியே என்னிடத்தில்..

ஏட்டினை எட்டும் எழுத்துக்களாய்

மட்டுமே நீ இருப்பதாலோ என்னவோ..

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.