(Reading time: 1 - 2 minutes)

கவிதை - தோழமை - சமீரா

friend

தரணி எங்கும்

தரம் காத்திட

தனித்துவம் போற்றிட

தன்னலம் பாரது உழைத்த நீ

தனிமையில் வாடி

தண்டிலந்து நிற்கிறாய்..

உருகுலைந்து நீ

உள்ளுக்குள்ளே அழுதாலும்

உன் அன்பை மறவாது

உரிமையுடன் அணிலும்

உன்னை சரணடைந்ததோ..!

கூடு கட்ட வழியில்லை என்றாலும்

கூடி வாழ்ந்த நாட்களை எண்ணி

குலசம் விசாரிக்க வந்ததோ

குட்டிக் குருவி...!

கருணையின் உறைவிடம் நீ

கனலியின் சுடர் உன்னை

காயப்படுத்திவிடும் என்று தான்

காளானும் குடைவிரித்ததோ..!

அன்பெனும் ஆதிமூலம் நீயாகிட

அரவணைப்பு நாடி

தோழமை போற்றிட

தோழனை தேற்றிட

இழந்ததை மீட்டிட

இனிமையான சந்திப்பு இதுவோ..!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.