கவிதை - தாய்மை - சமீரா
ஆழமான அன்பின்
ஆத்மார்த்தமான பந்தத்தின்
அழகான அடையாளம் நீ..!
சுற்றும் உலகம் மறந்து
சுழழும் நொடி ஒவ்வொன்றிலும்
சுமையின்றி சுகமாய் என்
சுவாசமாய் இன்று நீ..!
உருவம் அறியா
உன்னைப் பற்றியே
உதடுகளும் உணர்வுகளும்
உச்சரிக்கும் உயிர்த்தீண்டல் நீ..!
கடந்து போகும்
கணங்கள் அனைத்திலும்
கற்பனையுடனும் கனவுகளுடனும்
கலந்திருக்கும் கருப்பொருள் நீ..!
வாழும் நாட்களை
வண்ணச் சோலையாய் மாற்றிட
வந்த வரமாய் நீ..!
பயங்கள் மண்டியிட
பரிதவிப்புகள் மிஞ்சிட
பற்றிருக்கும் உன்னை
பாதுக்காப்பாய் பாரினில் சேர்த்திட
பல்லாயிரம் பிராத்தனைகளுடன் நான்..!
{kunena_discuss:779}