கவிதை - பட்டாம்பூச்சி - சமீரா
நாசி நுகர்க்கும்
நறுமணம் எங்கும் வீசிடும்
மலரிதழில் மையல் கொண்டு
மதுரம் அருந்த வந்தாயோ..!
தென்றல் சாமரம் வீச
தேனமுதம் அருந்தி
பசியாறி விட்ட
பட்டாம்பூச்சியே...
இளைப்பாற இடம் தந்த
இலையினை மறந்து விட்டாயோ..!
அயல் அதன் ஐயமின்றி
அருகல் கொண்டு
அரிதாரம் பூசிய பூவோடு
கொஞ்சல் என்னவோ..!
ஏகாந்தம் நிலை துறந்து
எட்டி கொஞ்சம் பாரும்
புன்னகை வதனமதில் பூக்க உம்மை
புகைபடம் எடுக்கிறார்
கலா ரசணையினாலோ
கவிதைப் படைக்கவோ..!
{kunena_discuss:779}