கவிதை - உன் கவிதையில்...! - சமீரா
அன்பினை வர்ணிக்கும்
அழகான வார்த்தை பின்னளாய்..
அணுஅணுவாய் வர்ணம் தீட்டிடும்
ஆத்மார்த்த காதலாய்..
தாய்மையின் வல்லமை
தாராளமாக உணர்த்திடும் அங்கமாய்..
நட்பும் நயவஞ்சகயும் பிரித்துரைக்கும்
நல்வினையாய்..
வார்த்தையில்லா மௌனத்தின்
வலியினை வார்த்திடும் ஆறுதலாய்..
வஞ்சிக்கப்படும் உள்ளத்தின்
வடுவினை வருடிடும் வரிகளாய்..
உணர்ச்சியுடன் உண்மையை
உறுதியாய் கூறிடும் ஆயுதமாய்..
உன் பேனா முனைகள் சிந்தும்
உன் எண்ணத்தின் வெளிப்பாடாய்..
நீ வடிக்கும் கவிதைகளில் கருவாய்
நீ அறியாமல் நானே என்றும்...