(Reading time: 1 - 2 minutes)

கவிதை - வண்ண நிலவு.. - சமீரா

moonNight

ஆதவன் சாயும் அந்தி நேரம்

ஆகாயம் வெட்கம் சிந்தும் தருணம்

அங்காங்கே மஞ்சனம் பூசிஇருள் இதமாய்...

இலக்கின்றி படரும் பனி...

இயற்றிக் கொண்டிருக்கிறது

இயற்கையில் ஓர் ஓவியம்..

அசைந்தாடும் மரத்தில்

அழகாய் கீச்சிடும் சிட்டு குருவி..

மெல்லிசையாய் எனக்கு மட்டும்..

மெல்லத்தீண்டும் தென்றல்..

மேனியில் சின்னதாய் சிலிர்ப்பு..

மேகக் கூட்டம் புடைசூழ

வான தேவதையின் வருகை..

வானம் எங்கும் மின்னிடும்

தாரகை ஊர்வலம்..!

எண்ணிலடங்கா விண்மீன்கள்

ஏகாந்தமாய் வண்ண நிலவு..

எண்ணிப் பார்க்கிறேன் என்னையும்

அழைப்பதாய்..

அருந்தும் காபியும் இன்று

அற்புதமாய்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.