கவிதை - நின்னை சரணடைந்தேன்.. - சமீரா
மெய் தீண்டிச் செல்லும்
தென்றல் ..
மௌனம் தேங்கி நிற்கும் நிமிடம்
மெதுவாய் உணர்த்திச் செல்கின்றதோ..
என்னவன் உன் சுவாசத்தை
சுமந்து வந்தேன் என்று..
ஆர்பரிக்கும் ஆழி தன்னில்..
அமைதியாய் கரை
அடி நனைத்துத் செல்லும் அலை
நினைவூட்டிச் செல்கின்றதோ..
மணல்வெளியில் காதலால்
பேசிய தருணங்களை...
ஆழமான வரிகள் தன்னை
அலங்கரிக்கும் இசை
அதில் தொட்டுச் செல்லும் சோகம்
விட்டுச் சென்ற உறவுவிற்கு
நித்தமும் உருவம் கொடுத்துச் செல்கின்றதோ...
வேற்றுமை விட்டு
வருகிறாய் எனக்காய் நீ..
வெறுமையை நெஞ்சில் சுமந்துக் கொண்டு
வெந்தணல் மீது நான்..
மரணித்த என் காதலை உயிப்பிக்க மயிலிறகால் வருடுகிறதோ உன் நினைவு..
நினைவு என்றே விலக்கி
வைத்து விட்டு விதி எனும்
பாதையில் செல்கிறேன் நான்..
நின்னை நீங்க முடிவில்லையே
முடிவிலியாய் நம் பந்தம்
தொடர வேண்டும் என்ற
கோரிக்கையுடன்
நிஜமாய் வந்து நிற்கிறாய் நீ..