கவிதை - தவிர்க்கப்பட வேண்டியது மணமுறிவு - சமீரா
மறுக்கப்பட்ட மன்னிப்பு
ஏற்கப்படாத சமாதானம்
ஒருநாள் வெடிக்கும் பூகம்பம்
தவறை உணர்ந்தால்
தட்டிக்கொடு
சிக்கலான விடயத்தில்
கொஞ்சம் விட்டுக்கொடு
தேவைகளை உரிமையில் கேள்
உடும்பு பிடியில் கேட்காதே
துன்பத்தில் துணையாய் இரு
மங்கைக்கான மதிப்பைக் கொடு
தன்னவனிடத்தில் தணிந்து போ
வீணான சண்டை தவிர்க்கப்படும்
பிடிவாதம் பிரிவின் அடிநாதம்
ஆழமான அன்பு மணவாழ்வின்
மாறாத அடையாளம்
பிடித்த கை பிரிவிற்கில்லை
இறுதிவரை இணைந்திருக்க தான்...!
{kunena_discuss:779}