(Reading time: 1 - 2 minutes)

கவிதை - தவிர்க்கப்பட வேண்டியது  மணமுறிவு - சமீரா

Hands together

மறுக்கப்பட்ட மன்னிப்பு

ஏற்கப்படாத சமாதானம்

ஒருநாள் வெடிக்கும் பூகம்பம்

தவறை உணர்ந்தால்

தட்டிக்கொடு

சிக்கலான விடயத்தில்

 கொஞ்சம் விட்டுக்கொடு

தேவைகளை உரிமையில் கேள்

உடும்பு பிடியில் கேட்காதே

துன்பத்தில் துணையாய் இரு

மங்கைக்கான மதிப்பைக் கொடு

தன்னவனிடத்தில் தணிந்து போ

வீணான சண்டை தவிர்க்கப்படும்

பிடிவாதம் பிரிவின்  அடிநாதம்

ஆழமான அன்பு மணவாழ்வின்

மாறாத அடையாளம்

பிடித்த கை பிரிவிற்கில்லை

இறுதிவரை இணைந்திருக்க தான்...!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.