கவிதை - உன் நினைவு... - சமீரா
விடை தெரியா ஆயிரம் கேள்விகள்
என்னுள் நீழும் தொடர்கதையாய்....
சிதறிவிட்ட என் காதல் இன்னும்
புதிர் அறுப்படாத விடுகதையாய்....
உன்னால் விழி இடுக்கில் கசியும்
ஓயாத கண்ணீர்...
உன்னைத் தேடும் கண்களுக்கு
நீ என்றும் காணல்நீர்....
இரண்டாய் உடைத்துவிட்டாய்
உயிராய் நேசித்த இதயத்தை...
எதைக்கொண்டு ஆற்றப்போகிறாய்
நீ கொடுத்த காயத்தை...
நிதர்சனத்தோடு நிழலாடுகிறது
உன் நினைவு...
என் காதல் என்றும் மெய்ப்படாது
தொடரும் கனவு...
{kunena_discuss:779}