கவிதை - இன்றைய திருமணம் - சமீரா
திருமண சந்தையில் சத்தமின்றி
சிதறடிக்கப்படும் இதயங்கள் ஏராளம்...!
மணம்புரிய கேட்கும் தகுதிகளோ
எண்ணிலடங்காமல் தாராளம்...!
அன்பால் ஆழமாய் உருவாகும் உறவு..!
ஏன் அதைக் கொண்டு எதிர்பார்க்கிறாய் வரவு...!
உனக்கும் உன் துணைக்கும் மகிழ்வாய்
வாழ போதாதா? மனப்பொருத்தம்...!
எதற்காய் வேண்டிநிற்கிறாய் வேறு பொருத்தம்...!
இன்பமாய் அரங்கேரவேண்டிய கலாச்சாரம்..!
இன்றோ மேடையேரும் ஆடம்பர வியாபாரம்...!
Lakshmi Sankar அவர்களின் “என் மண வானிலே” சிறுகதை என்னை மிகவும் பாதித்தது. அதன் வெளிப்பாடே! இக்கவிதை..! Lakshmi sankar அவர்களுக்கு இக் கவிதை சமர்பணம்!
{kunena_discuss:779}