கவிதை - பெண்ணே ...! - சமீரா
ஆயுதம் ஏதுமின்றி
ஏனடி என்னை வதம் செய்கிறாய் ..!
மௌன மொழி பேசி
உயிர் காற்றையும் உறையவைக்கிறாய்..!
கனவில் நீ வந்தால்
நனவில் நிலைதடுமாறி விழுகிறேன்..!
உன் ஓர விழிப்பார்வையால்
கண்ணாடி துகள்களாய் உடைகிறேன்..!
உன்னை கரம் பிடிக்க
பல நூறு கனா காண்கிறேன்..!
என் மனம் புரிந்தும்
ஏனடி இன்னும் நடிக்கிறாய்..!
உயிர் காதலுடன்
உனக்காய் அலைகிறேன்..!
பெண்ணே பதில் கூற ஏன்
இன்னும் தாமதிக்கிறாய்..!
{kunena_discuss:779}