கவிதை - எதற்காக....? - சமீரா
பணம் எனும் கொடிய பசியில்
தினம் ஓடுகிறான் மனிதன்...!
பசி மறந்து தூக்கம் தொலைத்து
எதற்காக இந்த பயணம்...?
இயற்கை அழித்து இலாபம் ஈட்டுவதில்
பயன் எதுவுமில்லை...!
விளைகிறது இயற்கையின் சீற்றம்
உன்னால் என்பதும் புரியவில்லை...!
நாளை உன் சந்ததிக்கு உன் செயலால்
எதுவுமே மிஞ்சப்போவதில்லை...!
உன் சுரண்டல் இன்னும் எதுவரை
தெரியவில்லை...!
இரத்த உறவுகளை ஆதரிக்க நேரமில்லை...!
விழுந்தவனுக்கு கரம் நீட்ட மனம்வருவதில்லை...!
காலடியில் மடிகிறது மனிதநேயம்
என்பதும் உன் நினைவில் இல்லை ...!
உன் பயணம் முடியும் வரை
உன் ஆயுள் நிலைப்பது நிச்சியமில்லை...!
ஓடி களைக்கும் நேரம் இழந்த இளமை
மனம் விரும்பிய வாழ்க்கை வாழ்ந்திடவும்
மீண்டும் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை...!
அவசர உலகத்தில் அர்த்தமின்றி
துரிதகதியில் அனைத்தையும் இழந்து
தொடரும் ஓட்டம் எதற்காக...?
{kunena_discuss:779}