கவிதை - உன்னோடு..! - சமீரா
கொட்டும் மழையில்
ஒற்றைக் குடையில்
மெல்லிய நடையில்
உன் கரம் பற்றி
நீண்ட தூரம் செல்ல வேண்டும்..!
மயக்கும் மாலைப்பொழுதில்
உலர்ந்த மணலில்
துடிக்கும் அலையை
உன்னருகில் இருந்து
ரசிக்க வேண்டும்..!
மொட்டை மாடியில்
சொட்டும் பனியில்
பௌர்ணமி நிலவில்
உன்னோடு நிலாச்சோறு
உண்ண வேண்டும்..!
{kunena_discuss:779}