கவிதை - வெட்கமா? புன்னகையா? - சமீரா
பிரிவுத்துயர் தாங்காது நான்
உலர்ந்து உயிர்ப்பற்று
உன் வரவை எதிர்பார்த்து
இலையுதிர சாமரங்கள் வீசி
உனக்காய் காத்திருக்கையில்!
என்னைக் காண பெண்னவள் நீ
உன் பரிவாரங்களுடன்
ஓடோடி வருகையில்
கண்களை மின்னலாய்
இடைவெட்டி மறைவது
உன் வெட்கமா? புன்னகையா?
{kunena_discuss:779}