கவிதை - அனாதையின் தவிப்பு - சமீரா
இப்போதெல்லாம் எனக்குள் நானே
சுருங்கிக் கொள்கிறேன்..!
கிடைக்காத தாய்மடிக்காக
ஏகப்பட்ட ஏக்கங்களும்
தனிமையின் தாக்கங்களும்
மனதை ஊசியாய் துழைக்க
நானோ தவித்துப்போகிறேன்..!
சுய பச்சாதாபத்தால் சுயத்தை
இழந்து விடுவேனோ..
சில நேரம் அஞ்சிக்கொள்கிறேன்..! Ii
இரவில் தலையனையை தாயாக
எண்ணி உறங்குகையில்
கற்பனையினூடே கண்ணீரும்
இணைந்தே வருகின்றது..!
விடுமுறையிலும் தனிமை
விதியே என்றென்னுகையில் நெஞ்சம்
கொஞ்மாய் கனக்கிறது...!
என்னைக் போல் எத்தனைபேர்
நிற்கிறார்களோ அனாதையாய்..!
சிந்தனை எழ சந்தமாய்
அழத்தான் தோன்றுகிறது...!
{kunena_discuss:779}