கவிதை - என்னவள்...! - சமீரா
மெல்லிய தென்றல்
மென்மையாய் என்னைத் தீண்ட
மௌனமாய் மனதில் என்னவள்
புன்னகையோடு வந்து போக
புதிதாய் புத்துணர்ச்சி...
பூரிப்புடன் மெல்ல பார்க்கிறேன்..!
கரைபுரண்டு கலைந்தது போகும்
கார்மேகக் கூட்டம்
சிதறடித்து ஓடுகையில்...
சித்தம் மயக்கும் சிரிப்புடன்
என்னவள் வட்டநிலவாய்
எனக்காய் வந்து நிற்கிறாள்...!
{kunena_discuss:779}