கவிதை - இது காதலா? - சமீரா
வார்த்தை ஜாலத்தில் உன்னை
வாயாடி வீழ்த்தும் நான்..!
உன் விழி வீச்சின்
விடையறிந்தும் உன்னிடம்
மொழியிழந்து மௌனமாய்
தோற்பதேனோ...!
தூரத்தில் நீ இருந்தால்
துரத்தும் உன் நினைவுகளால்
தொலைந்து போகும் நான்..!
உன் அருகாமையில்
உறைந்த பனிச்சாரலாய்
உருகி கரைவதேனோ..!
{kunena_discuss:779}