கவிதை - பெண் - வசுமதி
பனிக்குடம் உடைத்து
குருதியில் குளித்து
வெளியே குதித்தவள்..
நிலமுரச தவழ்ந்து
தத்தித் தாவி
எழுந்து நடந்தவள்..
துள்ளி குதித்து
படிகள் கடந்து
பட்டம் பெற்றவள்..
கூட்டை உடைத்து
தடைகள் முறித்து
சிறகு விரித்தவள்..
விதைக்கப்பட்டு
கருவில் சுமந்து
மீண்டும் உருவாக்குகிறாள்..
பூமி சுழற
மீண்டும் மீண்டும்
உருவெடுக்கிறாள் உருவாக்குகிறாள்..
{kunena_discuss:1143}