கவிதைத் தொடர் - அவளும் நானும் அமுதும் தமிழும்..!! - 05. மனம் மயங்குகிறேன் நானே... - வசுமதி
தங்க நிற நெல்மணி
உன் விரல் பட காத்திருக்க
அசைந்தாடும் பூந்தென்றலாய் நீ..
வாய்க்காலோரம் பொன் பாதகொலுசு பதிய
சலசலக்கும் நீரோடையில்
அடுத்த அடி எடுத்துவைக்கும் நீ..
இடதுகை வளை குலுங்க
வலதுகை மாம்பழம் பறிக்க
தேவக்கன்னிகையாய் நீ..
கருங்கூந்தல் நிலமுரச
காதோடு பிணைந்த குடை ஜிமிக்கி
அசைந்தாட வன தேவதையாய் நீ..
ஓடையிலிறங்கி நீரோடு நீராய் மிதந்து
மீனாய் குதித்து விளையாடும்
புள்ளிமானாய் நீ..
மயில்தோகை உடையனிதவளே
உன்னை நினைக்கையிலே
மனம் மயங்குகிறேன் நானே..
தமிழமுதன்...
அவளும் நானும் அமுதும் தமிழும்..!! - 04
அவளும் நானும் அமுதும் தமிழும்..!! - 06
{kunena_discuss:1143}