கவிதை - போர்க்களமாய் ஒரு திருமணம்..!! - வசுமதி
நேற்றிரவு நடுனிசியில்
போர்க்களமாய் ஒரு திருமணம்..
அழகு வின்மீனவளை கரம்பிடிதான்
அரசன் வின்மீனவன்..
ஒலியூட்ட குளிர்க்காற்று வான் நோக்கி எழ
மத்தளமாய் இடிமுழக்கம்..
ஒளியூட்ட இரு மேகங்கள் உரசி
வாட்போர் புரிந்து மின்னலானது..
மணமக்களை வாழ்த்திட
ருத்ரனின் தலைமையில் முழு குடும்பமும்..
மணவாழ்வைத் துவங்கிட வானிலிருந்து
மணமக்கள் மண்ணுலகில் கால்வைத்தனர்..
பூப்பந்துகள் தூவி ஆசி வழங்கினான் வருணன்
முத்துப்பவள முத்து மழையால்..
{kunena_discuss:1143}