கவிதை - முற்றம்..!! முற்றும்..?? - வசுமதி
முற்றத்தில் அன்று..
பாலைவனச் சோலையில்
ஜீவநதியாய் நீ -
அவள் கரு தேடி உதித்தாய்..
கண்ணிமைப்பதையே மறந்துவிட்டு -
மடித் தூங்கும் உன்னைக்
காத்தாள் நீ வளரும் வரை..
முற்றுப்பெருகையில் இன்று..
செயற்கையூற்று இல்லத்தில்
கள்ளிச் செடியாய் அவள் –
விட்டுச்சென்றுவிட்டவன் நீ..
இமைக்கும் விழிக்குமான
இடைவெளி குறைத்து
நீ சென்ற பாதையில்
உனக்காய் காத்திருக்கிறாள்
நீ வருவாய் என இன்றுவரை..
{kunena_discuss:1143}