(Reading time: 1 - 2 minutes)

கவிதை - முற்றம்..!! முற்றும்..?? - வசுமதி

hands

முற்றத்தில் அன்று..

பாலைவனச் சோலையில்

ஜீவநதியாய் நீ -

அவள் கரு தேடி உதித்தாய்..

கண்ணிமைப்பதையே மறந்துவிட்டு -

மடித் தூங்கும் உன்னைக்

காத்தாள் நீ வளரும் வரை..

முற்றுப்பெருகையில் இன்று..

செயற்கையூற்று இல்லத்தில்

கள்ளிச் செடியாய் அவள் –

விட்டுச்சென்றுவிட்டவன் நீ..

இமைக்கும் விழிக்குமான

இடைவெளி குறைத்து

நீ சென்ற பாதையில்

உனக்காய் காத்திருக்கிறாள் 

நீ வருவாய் என இன்றுவரை..

{kunena_discuss:1143}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.