கவிதை - முற்றம்..!! முற்றும்..?? - வசுமதி
வெயில் காலத்தில் கிணறில்
குதிக்க நினைக்குது மனம்..
மழை நேரத்தில் கைகோர்த்து
விளையாடத் துள்ளுது நெஞ்சம்..
கவலையில் உன் தோள்
சேர்ந்திட துடிக்குது உள்ளம்..
மகிழ்ச்சியை ஓயாமல் உன்னிடம்
பகிரத் தவிக்குது என்னிதழ்கள்..
தொலை தூரத்தில் உன் வாசம்
உன் நினைவுகளோடு இங்கு என் வாசம்..
உன் மாயப் பார்வைக்காய்
காத்திருக்கேன் ஏக்கங்களுடனே..
{kunena_discuss:1143}