கவிதை - பஞ்சமும் நீயே.. - வசுமதி
சாரளம் படர்ந்த பனிப்போர்வையில்
ஓவியமாய் உன் வர்ணம்..
வாசல் தாண்டி வருடும் தென்றலில்
மகரந்தமாய் உன் மணம்..
நெறுநெறு கற்கள் பதிந்த பூமியில்
குளிர்நிலவாய் உன் சுவடு..
அக்கினி பிழம்பாய் தகிக்கும் நெருப்பில்
ஐக்கியமாய் உன் நெஞ்சம்..
கார்மேக வண்ணனின் குடியிருப்பில்
காவியமாய் உன் பிம்பம்..
{kunena_discuss:1143}