கவிதை - என் பார்வையில்..!! - வசுமதி
தந்தையுடன் கதைத்துக் கொண்டே - அவன்
தலை சாய்த்து முடி கோதிய அழகை
கண்ட என் இருவிழியிகள் - இதயச்
சிறையில் பின்னிக்கொண்டது அழகனை..
சோர்ந்தவளை நேருக்குநேர் சந்திக்கத் தயங்கி
என்னை கடக்கையில் கடைக் கண்ணால்
கண்டும் காணாமலும் விரையும் அவன்
கண்ணனாகவே தெரிந்தான் என் கண்களுக்கு..
இந்த சேட்டைக்காரன் செய்யும் சேட்டைகளை
பருகவே பல பறவைகள் அவனை
சுற்றித்திரிந்தன – சில சமயம் அதனைக்கண்டு
மகிழ்ச்சி மட்டுமே அடைந்தது மனது..
விழா மேடையில் கையில் சேர்ந்த
பரிசை தாயின் கையால் பெற
ஆசையென ஆசிரியம்மாவை மேடை
ஏற்றியழகு பார்த்தன் என் மைந்தன்..
அம்மாவின் பார்வையில் பையன் எப்படி தெரிஞ்சான்னு ஒரு சின்ன கற்பனை.. முதல் முறையாக இந்த மாதிரி எழுதறேன்.. எப்படி இருக்குனு படிச்சிட்டு சொல்லுங்க.. விமர்சனங்கள் வரவேற்க படுகின்றன.. ;) :P
{kunena_discuss:779}