(Reading time: 1 - 2 minutes)

கவிதை - தத்தித் தாவியது மனமே..!! - வசுமதி

Baby and Mom

பிஞ்சுப்பொதி பாதங்களையும்

கைகளையும் காற்றோடு

மோதவிட்டு விளையாடிக் -

கொண்டிருந்தள்..அம்மூவென்ற

குரலிசையைக் கேட்டு

சடாரென குப்பிரவிழுந்து  

தத்தித் தத்தித் தவளை போல்

நீச்சலடித்து – வா வாவென்ற

திசைநோக்கி முன்னேரி

கையோடு கைசேர்த்து

வானரம் போல் வான் நோக்கி

முன்னேறி தோள் சேர்ந்து

எச்சில் முத்தம் வைத்து

என்னைக் கட்டிகொண்டது..

என் கண்மணியைக் கண்டு

என் மனமும்

தத்தித் தாவியது..!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.