கவிதை - தத்தித் தாவியது மனமே..!! - வசுமதி
பிஞ்சுப்பொதி பாதங்களையும்
கைகளையும் காற்றோடு
மோதவிட்டு விளையாடிக் -
கொண்டிருந்தள்..அம்மூவென்ற
குரலிசையைக் கேட்டு
சடாரென குப்பிரவிழுந்து
தத்தித் தத்தித் தவளை போல்
நீச்சலடித்து – வா வாவென்ற
திசைநோக்கி முன்னேரி
கையோடு கைசேர்த்து
வானரம் போல் வான் நோக்கி
முன்னேறி தோள் சேர்ந்து
எச்சில் முத்தம் வைத்து
என்னைக் கட்டிகொண்டது..
என் கண்மணியைக் கண்டு
என் மனமும்
தத்தித் தாவியது..!!
{kunena_discuss:779}