கவிதை - விடை..!! - வசுமதி
காதலை சொல்லும் கடிதங்கள்..
மறந்து போனதேனோ..??
பஞ்சுத் தலை பஞ்சுமிட்டாய் தாத்தாக்கள்
மாயமாய் போனதேனோ..??
திண்ணையடி அரசியல் விவாதங்கள்
அழிந்து போனதேனோ..??
இரவின் மடியில் கதைசொல்லும் பாட்டிகள்
சீரியல் பாட்டிகளானதேனோ..??
ஆலமரத்து ஊஞ்சல்களை
சாலைகள் விழுங்கியதேனோ..??
காலங்காலமாய் வளர்த்தெடுத்த தெருக்கூத்துகள்
சிறுப்பெட்டிகுள் அடைக்கிவைக்கப்பட்டதேனோ..??
இவ்வெல்லாவற்றிற்கும் விடையறிந்தும் விடை சொல்ல
மனம் இல்லாததேனோ..??
{kunena_discuss:779}