(Reading time: 1 - 2 minutes)

கவிதை - சோலையுடன் விட்டுச்செல்லலாமே..!! - வசுமதி

Street

ஆயிரமாயிரம் காதல் கதைகள்

அரங்கேறியது என் மடியிலே..

அனைத்திற்கும் காட்சிப் பொருளாய்

அனாதையாய் நிற்கிறேன் நானே..!!

மழையின் கருணையால் பசியாறி  

அழகாகும் நான்..

பாலிதீன் குப்பைகளால்

மாசுபட்டு அழுக்காகிறேன்..!!

வளைந்து நெளிந்து செல்லும் நான்

இணையற்ற திருப்புங்களுடன்

இணைக்கிறேன் பலரை..!! 

என்னுள் பயணித்தால்

என்றும் முன்னேற்றமே..

சாலையென்று பெயரெடுத்த என்னை

சோலையுடன் விட்டுச்செல்லலாமே..!!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.